Micah 3:5-7
3:5 இறைவாக்கினர்களைக் குறித்து ஆண்டவர் கூறுவது இதுவே: “அவர்கள் என் மக்களைத் தவறான வழியில் நடத்திச் செல்கின்றார்கள். வயிறார உண்ணக் கொடுத்தவரிடம் ‘அமைதி உண்டாகுக!’ என உரக்கச் சொல்கின்றார்கள்; வாய்க்குத் தீனி போடாதவரிடம் ‘புனிதப் போர் வரும்’ எனக் கூறுகின்றார்கள்.”
3:6 ஆதலால் “இறைவாக்கினரே, திருக்காட்சி உங்களுக்குக் கிடைக்காது; முன்னுரைத்தல் இராது; காரிருள் உங்களைக் கவ்விக் கொள்ளும்; இனி உங்கள்மேல் கதிரவன் ஒளி படராது; பகலும் உங்களுக்கு இருளாய் இருக்கும்.”
3:7 காட்சி காண்பவர்கள் மானக்கேடு அடைவார்கள்; முன்னுரைப்பவர்கள் நாணிப்போவார்கள்; அவர்கள் அனைவரும் தங்கள் வாயைப் பொத்திக் கொள்வார்கள்; ஏனெனில் கடவுளிடமிருந்து மறுமொழி ஏதும் வராது.