Micah 4:1-3
4:1 “இறுதி நாள்களில் ஆண்டவரின் கோவில் அமைந்துள்ள மலை; மலைகளுக்கெல்லாம் உயர்ந்ததாய் நிலைநிறுத்தப்படும்; குன்றுகளுக்கெல்லாம் மேலாய் உயர்த்தப்படும்; மக்களினங்கள் அதை நோக்கிச் சாரைசாரையாய் வருவார்கள்.
4:2 வேற்றினத்தார் பலர் அங்கு வந்து சேர்ந்து, ‘புறப்படுங்கள், ஆண்டவரின் மலைக்குச் செல்வோம்; யாக்கோபின் கடவுளது கோவிலுக்குப் போவோம்; அவர் தம் வழிகளை நமக்குக் கற்பிப்பார்; நாமும் அவர் நெறிகளில் நடப்போம்’ என்பார்கள்; ஏனெனில் சீயோனிலிருந்து திருச்சட்டம் வெளிப்படும்; எருசலேமிலிருந்து ஆண்டவரின் வாக்கு புறப்படும்.
4:3 அவரே பல மக்களினங்களுக்கு இடையே உள்ள வழக்குகளைத் தீர்த்துவைப்பார்; தொலைநாடுகளிலும் வலிமைமிக்க வேற்றினத்தார்க்கு நீதி வழங்குவார்; அவர்களோ தங்கள் வாள்களைக் கலப்பைக் கொழுக்களாகவும் தங்கள் ஈட்டிகளைக் கருக்கரிவாள்களாகவும் அடித்துக் கொள்வார்கள்; ஓர் இனத்திற்கு எதிராக மற்றோர் இனம் வாள் எடுக்காது; அவர்கள் இனி ஒருபோதும் போர்ப்பயிற்சி பெறமாட்டார்கள்.